
Butterfly & Biodiversity Park ஆரம்ப நிகழ்வு
உயிர்ப்பல்வகைமையைப் பாதுகாக்கும் நோக்கில், பிரதேச செயலகம் – சண்டிலிப்பாய் வளாகத்தில் “Biodiversity Corner” அமைக்கப்பட்டு, Butterfly & Biodiversity Park உருவாக்கும் செயற்பாடு மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திரு. குமாரசாமி பிரபாகரமூர்த்தி அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிர்வாகக் கிராம அலுவலர், உதவி மாவட்டப் பதிவாளர், சமுர்த்தி மகாசங்க முகாமையாளர் உள்ளிட்ட பதவி நிலை உத்தியோகத்தர்களும், அலுவலக உத்தியோகத்தர்களும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இத்திட்டத்தின் மூலம் பட்டாம்பூச்சிகள், தேனீக்கள் மற்றும் பிற மகரந்தச் சேர்க்கை உயிரினங்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற இயற்கைச் சூழல் உருவாக்கப்பட்டு, உயிர்ப்பல்வகைமையைப் பாதுகாக்கும் உயர்ந்த மனப்பாங்கு ஊக்குவிக்கப்பட்டது.
பதவி நிலை உத்தியோகத்தர்களும் ஏனைய உத்தியோகத்தர்களும் தங்களது கரங்களால் பட்டாம்பூச்சிகளுக்கு நட்பான மற்றும் தேன் வழங்கும் தாவரங்களை நாட்டி, உயிர்ப்பல்வகைமையைப் பாதுகாப்பதற்கான தங்களது பங்களிப்பை வழங்கினர்.
























