நேற்றைய தினம் 20.08.2026 வியாழக்கிழமை பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயத்தில் நடைபெற்ற திருவிழா நிகழ்வின் போது பயன்படுத்தப்பட்ட மின்னொளி காரணமாக சில பொது மக்களுக்கு பார்வை தொடர்பான அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சுமார் 40 பேர் வைத்தியசாலையை நாடியுள்ளதாகவும் அறியப்படுகிறது.
விசேட கண் வைத்திய நிபுணர் திரு.மலரவன் அவர்களின் ஆலோசனைக்கமைய, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஊடாக, நேற்றைய நிகழ்வில் கலந்து கொண்ட ஏனைய பொது மக்களும் தங்களது கண்களை அருகிலுள்ள வைத்தியசாலையிலோ அல்லது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலோ பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலும், இவ்விடயம் தொடர்பாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களும் பொதுமக்களுக்கு உரிய அறிவித்தலை வழங்கி, துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கியுள்ளார்.
நேற்றைய நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் தங்களது கண்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, ஏதேனும் பார்வை தொடர்பான அசௌகரியம் இருப்பின் தாமதிக்காமல் வைத்தியசாலை சென்று கண் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இவ்வறிவித்தலை ஏனையவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும்.


















