
"கிளித்தட்டுப் போட்டியில் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் வெற்றிக் கிண்ணத்தைச் சுவீகரித்துச் சாதனை படைத்தது"
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கிடையே ஆண்டு தோறும் நடத்தப்படும் அரச அதிபர் வெற்றிக் கிண்ணச் சுற்றுப் போட்டியின் ஒரு அங்கமான ஆண்களுக்கான கிளித்தட்டுப் போட்டிகள் கடந்த 14.06.2026 ஞாயிற்றுக்கிழமை சண்டிலிப்பாய் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
பதினாறு அணிகள் பங்கு கொண்ட இந்தப் போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தெரிவான தெல்லிப்பளைப் பிரதேச செயலகத்தை எதிர்த்து விளையாடிய சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணி 4 : 0 எனற அடிப்படையில் வெற்றி வாகை சூடியது.
மு.ப 9.00 மணிக்கு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பிரதம கணக்காளர் திரு கிருபாகரன் அவர்கள் அதிதியாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
யாழ்ப்பாண மாவட்ட தாச்சிச் சங்கத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவட்டச் செயலக ஊழியர் நலன்புரிச்சங்கத் தலைவர், பிரதேச செயலாளர்கள், உதவிப்பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக மாவட்டச் செயலக, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



















